Tuesday, November 3, 2015

தெப்பக்குளம் - Theppakkulam



பெருமாள் மலை - Perumal Malai



பெருமாள் மலை செல்லும்  வழியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் 


 பறவையின் பார்வை  கோணத்தில் ... பெருமாள் மலை

Courtesy: Google Maps
 



பெரிய ஏரி (செச்சை) - Periya Eri


பறவையின் பார்வை  கோணத்தில் ... பெரிய ஏரி

Courtesy: Google Maps




செச்சை என்ற இந்த கட்டிடம் கட்டப்பட்டது கிபி 14 ஆம் நூற்றாண்டு என்பது பெரும் வியப்பானது. ஆனால் இது சுமார் 600 ஆண்டுகள் கடந்தும் நம்மை அற்புதமான வடிவமைப்பும், வியப்பூட்டும்  கட்டிடக் கலையின் பொக்கிஷம், துறையூரின் அடையாளம்!

சிவன் வாழும் பெட்டியை தான் 'செச்சை' என்று அக்காலத்தில் அழைத்துள்ளனா். இதற்கு சான்றாக வீர சைவா்கள் (லிங்கம் கட்டி அய்யா்) தங்கள் கழுத்தில் ஒரு பெட்டகம் கட்டியிருப்பார்கள்..

இதன் உள்ளே லிங்கம் பொருத்தப்பட்டிருக்கும், இந்த பெட்டகத்துக்கு தினமும் பூஜை, வழிபாடு செய்து வந்துள்ளனா்.

கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செச்சை ஜமின்தார்கள் துறையூரை ஆண்ட காலத்தில் இது பொழுதுபோக்கு கூடமாக இருந்ததாகவும், ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட வசந்த மண்டபம் என்று பல வரலாற்று நிகழ்வுகளை தாங்கி நிற்கிறது.

தற்போது 280 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய ஏரியின் நடுவில் அமைந்துள்ள செச்சையில் (தி - ச - மி 25 - 3 - 22) என்று தேதி பதிக்கப்பட்டு இருக்கிறது . வேறு சான்றுகள் எதுவும் இங்கு கிடைக்கவில்லை. 

சிவன் குடியிருக்கும் பெட்டகம் போன்ற வடிவமைப்பை உடையதால் அதை பலரும் ஆன்மீக ஸ்தலமாக கருதுகின்றனா். 

இதனை உறுதி செய்யும் வகையில் அன்று துறையூரை ஆட்சி செய்த மகாராஜாவை பற்றி அப்பகுதி வாசிகள் கூறுகையில்,

600 வருடங்களுக்கு முன்பு துறையூரை ஆண்ட மகாராஜா காசி ஸ்தல யாத்திரை சென்ற நேரத்தில் தன்னுடைய தம்பியான இலிங்கதுரையை மன்னராக நியமித்து சென்றுள்ளார். 

இலிங்கதுரையின் ஆட்சியில் துறையூர் நந்திகேஸ்வரா் ஆலயத்துக்கு தனி தீா்த்தக் குளம் வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெப்பகுளத்தை உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்டது தான் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. 

அதோடு தன்னுடைய கஜானாவில் இருந்த மொத்த பணத்தையும் அன்னதானத்துக்காகவும், சொர்ணதானதுக்காகவும் செலவு செய்தார்.

இதற்கிடையில் காசிக்கு சென்ற மகாராஜா திரும்பியபோது தன்னுடைய அனுமதி இன்றி கஜானா காலியானதைக் கண்டு கோபம் அடைந்து தன்னுடைய தம்பியை சிறைசேதம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் மக்களுக்காக அரசின் கஜானாவில் எதையும் மிச்சம் வைக்காமல் செலவிட்டு அவா்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததால் மக்களின் அன்பையும், அரசவை மந்திரிகளின் ஆதரவை பெற்றதால் அவா்கள் இலிங்கதுரையை சிறை சேதம் செய்யாமல் அவா் தப்பிக்க உதவி செய்தனா். 

தப்பி சென்ற அவா் மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை கண்டு அவரால் ஈா்க்கப்பட்டு சீடரானார். 

இதனிடையே துறையூரை ஆண்டுவந்த மகாராஜாவுக்கு முதுமை தொற்றிகொள்ள அவருக்கு வாரிசு இல்லாததால் தன்னுடைய வாரிசாக இருந்த தம்பியை தான் சிறைசேதம் செய்ய சொன்னதை நினைத்து வருத்தபட ஆரம்பித்துள்ளார். 

மகாராஜாவின் புலம்பலை கேட்ட மந்திரிகள் இலிங்கதுரையை நாங்கள் சிறைசேதம் செய்யவில்லை. அவர் உயிரோடு திருவண்ணாமலையில் உள்ளார் என்று கூறியதையடுத்து மகாராஜா மனம் மகிழ்ந்து தன்னுடைய தம்பியை அழைத்துவர உத்தரவிட்டார்.

ஆனால் குருநாதரை பிரிய மனமில்லாத லிங்கதுரை அண்ணனுடைய அழைப்பை ஏற்க மறுத்தார். 

ஆனால் அவரை வர வைக்க வேண்டும் என்று எண்ணிய மகாராஜா மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை வரவழைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். 

அதோடு அவரும் அவருடைய சீடா்களும் வந்து தங்க அரண்மனைக்கு எதிரே மடம் ஒன்றை கட்டினார். தற்போது பிரசன்னா திருமண மகாலுக்கு அருகே உள்ள பெரிய மடம் தான் அது. அவா் நினைத்தபடி ஆதி சிவபிரகாச சுவாமிகள் சீடர்களுடன் மடத்தில் தங்க வைக்கப்பட்டதோடு, தம்பியை மீண்டும் மன்னராக்கினார். 

மன்னராக பொறுப்பேற்ற இலிங்கதுரை மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும், அவா்களும் தம் குருநாதரின் உபதேசங்களையும் ஏற்று வளமான வாழ்க்கையை பெற வேண்டும் என்றும் வேண்டி அமைக்கப்பட்டது தான் ஏரியின் நடுவே அமைந்துள்ள செச்சைக் கட்டிடமாகும்.

இந்த செச்சையில் பல மகான்களின் ஆன்மிக சொற்பொழிவுகள், நடைபெற்று கடந்த 600 வருடங்களுக்கும் மேலாக துறையூா் மக்களுக்கு ஆன்மீக ஸ்தலமாக கம்பீரமாக ஏரியின் நடுவில் காட்சியளிக்கிறது

தகவல்கள்: அருள்மிகு குமார தேவர் திருமடம் திருமுதுகுன்றம் (விருதாச்சலம்) 07-11-2001 ல் வெளியிட்ட "சீர்வளர் சீர் ஆதி சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு" நூலிலிருந்து. 


பேருந்து நிலையம் - Bus Stand


பேருந்து நிலையம் - Bus Stand