Wednesday, June 9, 2010

1. முதற்பதிவு

துறையூர் சொந்தங்களுக்கும், வலை உலா வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் எமது இனிய வணக்கங்கள்!

கல்வியோ, தொழிலோ,
ஏனையக் காரணத்திலோ,
வேறிடம் வசித்தாலும்,
நினைவுகளின் வேரிடம்,
சொந்தவூரின் ஈரமிருக்கும்!

பெட்டிச்செய்தியென்றாலும் பெருமிதமே,
தினசரிகளில் ஊரைக்கண்டதும்!
தொலைக்காட்சியிலோ,
வலைப்பக்கங்களிலோ,
மண்மணக்கை யில்மனமகிழுது!

சிலச்சிற்றூர்களும் சரித்திரத்தில்
தோரணமாயிருக்கையில்!
ஏங்கித்தான் போகின்றோம்,
எமதூரின் புகழறியாமல்,
தெரியாமல் !!!

யாமறிந்த வரலாற்று / சமகால நிகழ்வுகளை வலைப்பதிவுகளாக்கும் முயற்சியில் ...
- பா. சங்கர்

1 comment: