Tuesday, June 15, 2010

1.1 ஊரைப் பற்றி

துறையூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும்.

2001 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 30,998 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். துறையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.

நகரசபைப் பற்றி

தற்சமயம் நகரசபையில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன.

17.01.1970 முதல் நகர பஞ்சாயத்திலிருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக,
22.05.1998 முதல் மூன்றாம் நிலை நகராட்சியிலிருந்து இரண்டாம் நிலை நகராட்சியாக,
02.12.2008 முதல் இரண்டாம் நிலை நகராட்சியிலிருந்து தேர்வுநிலை நகராட்சியாக ...

சட்டமன்றத் தொகுதி

கடந்த 2006 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை உப்பிலியபுரம் தொகுதியிலிருந்து தற்போது "துறையூர்" சட்டமன்றத் தொகுதியாக!

நாடாளுமன்றத் தொகுதி

பெரம்பலூர் (தனி) தொகுதிக்குட்பட்டது.

வரமா? சாபமா?

பட்டிமன்றமே வைக்கலாம்; துறையூரை இவ்வாறு பிரித்தமைக்கு;

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி (பெரம்பலூர் மாவட்டமாக பிரிந்தபொழுது திருவள்ளுவர் மாவட்டத்தில், பின்பு மீண்டும் திருச்சியில் இணைந்தது தனிக்கதை)
கல்வி மாவட்டம் : முசிறி
நாடாளுமன்றத் தொகுதி : பெரம்பலூர் (தனி)
சட்டமன்றத் தொகுதி : துறையூர் (இதற்கு முன்பு உப்பிலியபுரம்)

* * * * *
வரலாறு

ஜமீந்தார்களால் (துரை) ஆளப்பட்ட ஊரென்பதால் துரை + ஊர் = "துரையூர்" எனவும்,

துறை (நீர்த்துறை) கள் நிறைந்த (பெரிய ஏரி, சின்ன ஏரி மற்றும் நீர்க்குட்டைகள்) ஊரென்பதால் துறை + ஊர் = "துறையூர்" எனவும் ஊர்ப்பெயர் மருகியிருக்கலாம்.

"தீர்த்தபுரி" எனும் பெயராலும் அழைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி.


துரையூரா / துறையூரா ???

வழுவானத் தகவல் திரட்டும் முயற்சியில் ...

* * * * *

No comments:

Post a Comment