Tuesday, June 15, 2010

4. அரசியல் தலைவர்களின் வருகை/சொற்பொழிவு

4.1 அறிஞர் அண்ணா

1932 ல் துறையூரில் தமிழர் மாநாடு

பெரியார் அவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் "தமிழர் மாநாடு" ஒன்றை ஏற்பாடுச் செய்திருந்தார். அந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு அண்ணாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பெரியாரின் அன்பு அழைப்பிற்கினங்க அண்ணா அம்மாநாட்டில் கலந்துக் கொண்டு, சீரிய சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அது வரையில் அண்ணா அவர்கள் சென்னையிலுள்ள இரு சிலருக்கே அறிமுகமானவராயிருந்தார். துறையூர் மாநாட்டிற்குப் பிறகு தான் அவரைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நீதிக்கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்கு அறிமுகப்படுத்தியது.


* * * * *

No comments:

Post a Comment